வடகிழக்கில் பொலிஸ் சேவையில் வடகிழக்கு இளைஞர் யுவதிகளை இணையுமாறு கோரிக்கை -

வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள் பொலிஸ் யுவதிகள் பொலிஸ் சேவைக்குள் இணைத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு சிவில் பிரஜைகள் பொலிஸ் இணைப்பகத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கசர்,

வடகிழக்கில் தமிழ் மொழி பேசும் பொலிஸாரின் எண்ணிக்கை மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது.குறிப்பாக பொலிஸில் உள்ள தமிழ் பேசும் யுவதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

கடந்த கால நிலைமைகள் காரணமாக பொலிஸ் சேவையில் தமிழ் பேசும் இளைஞர்கள் யுவதிகள் இணைவது மிகவும் குறைவான நிலையிலேயே இருந்துவருகின்றது.இதன்காரணமாக வடகிழக்கில் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியை அமுல்படுத்துவதில் சவால்கள் இருந்துவருகின்றது.

இந்த நிலையில் வடகிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில்வாய்ப்பு சந்தர்ப்பத்துடன் தமது பகுதியை பாதுகாக்கும் சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.

வடகிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமிழில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.இந்த குறைகளை நிவர்த்திசெய்யவேண்டுமானால் தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள் பொலிஸ் திணைக்களத்தில் இணையவேண்டும்.

இன்று அரசசேவையினை எதிர்பார்த்துக்கொண்டுள்ளவர்களுக்கும் சிறந்த சந்தர்ப்பமாகும்.சாதாரண தர சித்தியுடன் அரசசேவையில் இணையும் சந்தர்ப்பமாக பொலிஸ்சேவை இருந்துவருகின்றது.

இதனை வடகிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகள் பயன்படுத்தி பெருவாரியாக இணைந்துகொள்ளவேண்டும் என கோரிக்கையினை முன்வைக்கின்றேன் என்றார்.