மட்டக்களப்பு பறங்கியர் சங்கத்தின் கலாசார நிகழ்வு

(லியோன்)

கிறிஸ்து  பிறப்பு  விழாவை  முன்னிட்டு  மட்டக்களப்பு  பறங்கியர் சங்கத்தின் கலாசார  நிகழ்வு   மட்டக்களப்பில்   இடம்பெற்றது 
.

மட்டக்களப்பு  பறங்கியர் சங்கத்தினால்  வருடாந்தம்  நடாத்தப்படும் கலாசார ஒளிவிழா  நிகழ்வு    பறங்கியர்    சங்க  தலைவர்   டேரி ஸ்டோவஸ்  தலைமையில்  இன்று மாலை  மட்டக்களப்பு   சின்ன உப்போடை பறங்கியர் கலாசார  மண்டபத்தில்  இடம்பெற்றது .

ஆரம்ப  நிகழ்வாக   பறங்கியர்  சங்க  உறுபினர்களின்  சிறுவர்களினால்       நிகழ்வுக்கு  வருகை  தந்த  அதிதிகளை   மலர் செண்டு வழங்கி  அழைத்து         வரப்பட்டனர் .

அதனை  தொடர்ந்து   இறைவணக்கத்துடன்  பறங்கியர்  சங்கத்தினால்               வருடாந்தம்  நடாத்தப்படும்  கலாசார  ஒளிவிழா கலை  நிகழ்வுகள்  இடம்பெற்றது .

ஒளிவிழா  நிகழ்வில்    பிரதம  விருந்தினர்களாக மட்டக்களப்பு  தன்னாமுனை புனித வளனார் ஆலய பங்குதந்தை ரமேஷ் கிறிஸ்டி , எகெட் கரிதாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜெரோம் டி லிமா , சகாயபுரம் சதாசகாய அன்னை ஆலய பங்குதந்தை பேதுரு ஜீவராஜ்  மற்றும்   ஒளிவிழா நிகழ்வுக்கு  வருகை தந்த  கிழக்கு மாகாண   பறங்கியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .


இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் பறங்கியர் பாரம்பரிய கலாசாரத்தை                பிரதிபலிக்கும்  நடன நிகழ்வுகளும்   கலாச்சார மொழியிலான பாடல்களும்   இடம்பெற்றதுடன்  ,கலாசார நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசில்களும்,ஐந்தாம் தரம் புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும்  பசில்களும் , கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு   பறங்கியர் சங்க உறுப்பினர்களின் விதவை பெண்களுக்கான  வருடாந்தம்  வழங்கப்படும் கொடுப்பனவுகளும்   வழங்கிவைக்கப்பட்டது.