ஓய்வுபெற்று செல்லும் அதிபர்களின் சேவை நலன் பாராட்டு விழா

(லியோன்)

அதிபர்களின்  சேவை நலன் பாராட்டு விழா இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்வி கோட்டம் அதிபர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்விக்கோட்டத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்று செல்லும் அதிபர்களின் சேவை நலனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஜே ஆர் பி விமல்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் பாடசாலை மண்டபத்தில் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது . 

இந்த சேவை நலன் பாராட்டு விழாவில்  ஒய்வு பெற்று செல்லும் அதிபர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு , நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு  வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , மற்றும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்வி கோட்டம் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர்