மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய வருடாந்தம் ஒளிவிழா நிகழ்வு

 (லியோன்)

மட்டக்களப்பு ஜெயந்திபுரம்  கெத்செமனே கொஸ்பல் ஆலய   வருடாந்தம்  ஒளிவிழா  நிகழ்வு    ஆலய தலைமை போதகர் அருட்திரு பி டப்ளியு . மரியதாஸ்   தலைமையில்   12.12.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை  மட்டக்களப்பு   ஜெயந்திபுரம்  கெத்செமனே கொஸ்பல் ஆலயத்தில்   நடைபெற்றது


ஆரம்ப  நிகழ்வாக   அதிதிகளை மலர்மாலை அணிவித்து பாடசாலை சிறார்களினால் அழைத்து வரப்பட்டனர்

இதனை   தொடர்ந்து   இறைவணக்கத்துடன்  மாணவர்களின் ஒளிவிழா  கலை  நிகழ்வுகள்     இடம்பெற்றது .

ஒளிவிழா  நிகழ்வில்     அதிதிகளாக போதகர் சங்க தலைவர் அருட்திரு  எஸ் . புவனேந்திரன் , லைட் ஹவுஸ் ஆலய  போதகர் அருட்திரு  கே .விஜயன் , மட்டக்களப்பு  மண்முனை மேற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் எம் . ஹரிகரராஜ் ,ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் டேவிட் , ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி .என் .முகுந்தன் ,கிராம சேவை உத்தியோகத்தர்  வி .லவகுமார்,  ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தோமஸ் கந்தையா , ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ் . முகுந்தன் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் .பெற்றோர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர் .

இதன்போது ஒளிவிழா நிகழ்வில்  கலந்துகொண்ட அதிதிகளினால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டது.