மட்டக்களப்பு ஜெயந்திபுரம்
கெத்செமனே கொஸ்பல்
ஆலய வருடாந்தம் ஒளிவிழா நிகழ்வு ஆலய தலைமை போதகர் அருட்திரு பி டப்ளியு . மரியதாஸ் தலைமையில் 12.12.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலயத்தில் நடைபெற்றது
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து பாடசாலை சிறார்களினால் அழைத்து
வரப்பட்டனர்
இதனை தொடர்ந்து இறைவணக்கத்துடன் மாணவர்களின் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .
ஒளிவிழா நிகழ்வில் அதிதிகளாக போதகர்
சங்க தலைவர் அருட்திரு எஸ் . புவனேந்திரன்
, லைட் ஹவுஸ் ஆலய போதகர் அருட்திரு கே .விஜயன் , மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் எம் .
ஹரிகரராஜ் ,ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் டேவிட் , ஏறாவூர் பற்று உதவி
பிரதேச செயலாளர் திருமதி .என் .முகுந்தன் ,கிராம சேவை உத்தியோகத்தர் வி .லவகுமார், ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்
தோமஸ் கந்தையா , ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ் . முகுந்தன்
மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் .பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இதன்போது ஒளிவிழா நிகழ்வில் கலந்துகொண்ட
அதிதிகளினால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.