இருதயபுரம் கிழக்கு பாலர் பாடசாலை சிறுவர்களின் சிறுவர் தின நிகழ்வுகள்


சர்வதேச சிறுவர்  தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு மாநகர சபை பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றது  .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு மாநகர சபை பாலர்  பாடசாலை சிறார்களின் சிறுவர் தின நிகழ்வுகள்  மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் தலைமயில் சிறப்பாக பாடசாலையில் நேற்று மாலை   நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டனர் ,அதனைதொடர்ந்து பாடசாலை கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் சிறார்களின் நிகழ்வுகள் ஆரம்பமானது .இந்த நிகழ்வில் சிறார்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன்  இவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் அதிதிகளாக பாலர் பாடசாலை ஒய்வு நிலை அதிபர் திருமதி . லலிதா சுந்தரலிங்கம் ,  மாநகர சபை கணக்காளர்  ஜோன் பிள்ளை , மாநகர சபை செயலாளர் திருமதி . றிப்கா சபீன் ,  கிராம சேவை உத்தியோகத்தர் இ.பிரதீசஸ்காந்த  மற்றும்  பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை  சிறார்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்