சர்வதேச சிறுவர்
தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு
இருதயபுரம் கிழக்கு மாநகர சபை பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள்
நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு மாநகர சபை
பாலர் பாடசாலை சிறார்களின் சிறுவர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் தலைமயில் சிறப்பாக பாடசாலையில் நேற்று மாலை நடைபெற்றது .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டனர்
,அதனைதொடர்ந்து பாடசாலை கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் சிறார்களின்
நிகழ்வுகள் ஆரம்பமானது .இந்த நிகழ்வில் சிறார்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகள்
நடைபெற்றதுடன் இவர்களுக்கு பரிசில்களும்
வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் அதிதிகளாக பாலர் பாடசாலை ஒய்வு நிலை
அதிபர் திருமதி . லலிதா சுந்தரலிங்கம் , மாநகர சபை கணக்காளர் ஜோன் பிள்ளை , மாநகர சபை செயலாளர் திருமதி .
றிப்கா சபீன் , கிராம சேவை உத்தியோகத்தர்
இ.பிரதீசஸ்காந்த மற்றும் பாடசாலை
ஆசிரியர்கள் ,பாடசாலை சிறார்கள்
பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்