(லியோன்)
தொற்றாநோய்கள் மற்றும் வாழ்க்கையின் பயணம் தொடர்பான கருத்தரங்கு இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது.
அண்மை காலமாக பல்வேறுவிதமான நோய்கள் எமது
சமுதாயத்தின் மத்தியிலே உருவாக்கி வருகின்றது . அது எங்களுடைய வாழ்க்கை பயணத்தை எவ்வாறு நடத்திக்கொண்டு இருக்கின்றது , இந்த
தொற்றாநோய்கள் வருவதற்கு காரணம் தொடர்பாக சமுதாயத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்
என்கின்ற நோக்கத்தில் சமூக மட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச அலுவலக
உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்காக நடைபெற்றது .
இந்த கருத்தரங்கில் வளவாளராக மாவட்ட தொற்றாநோய் வைத்திய அதிகாரி வைத்தியர்
ஆர் . நவலோஜிதன் மற்றும்
கருத்தரங்கில் மண்முனை வடக்கு பிரதேச
செயலக வாழ்வின் எழுச்சி சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .










