மட்டக்களப்பு இலங்கை வங்கி மேற்தரக் கிளையின் வங்கி வாணி விழா நிகழ்வுகள்

(லியோன்)

இலங்கை
  வங்கி   மட்டக்களப்பு  அலுவலகத்தில்  வாணி  விழா  நிகழ்வுகள்  வெகு சிறப்பாக நடைபெற்றது  
.மட்டக்களப்பு  இலங்கை வங்கி  மேற்தரக் கிளையின்  வங்கி உத்தியோகத்தர்களின்  ஏற்பாட்டில்  வங்கி  சிரேஷ்ட  முகாமையாளர்  எம்.  . நௌபீல் தலைமையில்  06.10.2016 மாலை வாணி  விழா   சிறப்பாக  பூஜைகள் நடைபெற்றது .

கல்வி, செல்வம், வீரம்  ஆகியவற்றை   கொண்டு   விளங்கும்  முப்பெரும் தேவிகளுக்குரிய   தினமாக   நவராத்திரி  தினம்   ஒன்பது  நாட்களும்  அனுஸ்டிக்கப்படுகின்ற வேளையில் இதன் ஒரு தினமாக வாணி  விழா சிறப்பு  பூஜைகள் சிவஸ்ரீ  டி . சரவணபவன்  சர்மா குருக்கள் தலைமயில் தீபாராதனைகளுடன் மட்டக்களப்பு  இலங்கை வங்கி  மேற்தரக் கிளையில் நடைபெற்றது

வாணி விழா பூஜை  நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் . கணேசராஜா ,  மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்  கே .பி . கீர்த்திரத்ன மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ஹெட்டிஹாரச்சி, வங்கி  உத்தியோகத்தர்கள் வங்கி  வெளிக்கள  உத்தியோகத்தர்கள்          மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள்  வங்கி  வாடிக்கையாளர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.