கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை கொண்டு விளங்கும் முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக
நவராத்திரி தினம் ஒன்பது நாட்களும்
அனுஸ்டிக்கப்படுகின்ற வேளையில் இதன் ஒரு தினமாக வாணி விழா சிறப்பு பூஜைகள் சிவஸ்ரீ டி . சரவணபவன் சர்மா குருக்கள்
தலைமயில் தீபாராதனைகளுடன் மட்டக்களப்பு இலங்கை வங்கி மேற்தரக் கிளையில் நடைபெற்றது
வாணி விழா பூஜை நிகழ்வில்
பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட
நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் . கணேசராஜா , மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கே .பி . கீர்த்திரத்ன மற்றும் மட்டக்களப்பு பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டிஹாரச்சி, வங்கி உத்தியோகத்தர்கள் , வங்கி வெளிக்கள உத்தியோகத்தர்கள் ,
மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் வங்கி வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.