மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கிலிட்டு தற்கொலை

(லியோன்)

மட்டக்களப்பு கூழாவடி பகுதியல் உள்ள வீடொன்றில் இருந்து  இன்று வெள்ளிக்கிழமை  காலை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கூழாவடி  இலக்கம்  31 /1.  8 குறுக்கு வீதி  பகுதியை சேர்ந்த  புண்ணியமூர்த்தி சத்திவேல் ( வயது 31) இரண்டு பிள்ளைகளின் தந்தையையே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என  உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .


இவரது மரணம் தொடர்பான புலன்விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருவதோடு மரணம் தொடர்பாக  விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்