மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளவிய ரீதியில் நடைபெற்ற புலமைபரீட்சைக்கான (2016 ஆம் ஆண்டுக்கான)வெட்டுப்புள்ளிகளின் படி151புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியில் 28மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

சித்திபெற்ற மாணவர்களின் விபரம்,

பா.தனுஜன்(183),என்.எம்.நஹ்தி(181), லோ.ரனேஸ்(181), நி.லதுமிதன்(174),ஜெ.ருதேஸ்(173), த.சஞ்ஜித்(170), சி.சஜந்த்(163), கோ.சஜிகரன்(161),தி.ரிஷிதர்(159), ஜெ.திக்சயன்(159), து.அனுருத்தன்(159), தே.சுஜாங்கன்(157), லோ.மோஸஸ்(156), ஜெ.சகீதன்(156), வி.ஸ்வாத்மிகன்(156), சு.கிபிஷாந்(157), பீ.சஞ்சய்(157), ர.வித்தியாசிகன்(156), ர.லிலுக்ஸன்(156), ச.அக்சரன்(155), ர.கனிஷ்வர்(155), இ.தர்ஷாந்(155), ஏ.ஏ.சுரைப்(154), ச.டிருக்சன்(153), ரா.கதுசான்(152), அ.தேவகரிதாஸ்(153),மு.ருக்சதன்(153),சு.பவிசாந்(154) ஆகிய மாணவர்களேயாகும்.

அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ்,பிரதியதிபர் இராசதுரை பாஸ்கர ,பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழையமாணவர் சங்கம்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள், தங்களின் வாழ்த்துக்களை இன்று பாடசாலையில் வைத்து தெரிவித்தார்கள்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து மேற்கொண்டுவரும் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்டத்தின் ஓரு படியாக இந்த வெற்றி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.