அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

(லியோன்)


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக  நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு  சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .


இதற்கு அமைவாக  மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர்  மகா  வித்தியாலய  சுகாதார கழக  ஆசிரியர் திருமதி .மேர்வின்   ஒழுங்கமைப்பில் வித்தியாலய அதிபர் என். தர்மசீலன்  தலைமையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று நடைபெற்றது .

இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வானது பாடசாலை  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து   சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் டெங்கு ஒழிப்போம் எனும் தொனியில் பதாகைகளை ஏந்தியவாறு  ஊர்வலத்தை   மேற்கொண்டனர் .

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு பிரதான பார் வீதி பகுதியில்  மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து  சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையிலான டெங்கு ஒழிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது .. 

இந்நிகழ்வுகளில்  மட்டக்களப்பு கல்வி வலய  உதவி கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) வி .லவக்குமார் , ஆசிரியர் ஆலோசகர் ஜி .கிருஷ்ணபிள்ளை  மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களை கலந்துகொண்டனர் .