(லியோன்)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தேசிய டெங்கு
கட்டுப்பாட்டு பிரிவு - சுகாதார அமைச்சு
மற்றும் ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு
பணிப்பிரிவு ஆகியவற்றின் பணிப்புரைக்கு
அமைவாக நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .
இதற்கு அமைவாக மட்டக்களப்பு
கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு
அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய
சுகாதார கழக ஆசிரியர் திருமதி
.மேர்வின் ஒழுங்கமைப்பில் வித்தியாலய
அதிபர் என். தர்மசீலன் தலைமையில் டெங்கு
ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று நடைபெற்றது .
இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வானது பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில்
டெங்கு ஒழிப்போம் எனும் தொனியில் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தை மேற்கொண்டனர்
.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு பிரதான பார் வீதி பகுதியில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையிலான டெங்கு
ஒழிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது ..
இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு
கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர்
(உடற்கல்வி) வி .லவக்குமார் , ஆசிரியர் ஆலோசகர் ஜி .கிருஷ்ணபிள்ளை மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களை
கலந்துகொண்டனர் .