மருதடி வீதி புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு திருவிழா

மட்டக்களப்பு வாவிக்கரை இரண்டு மருதடி வீதியில் உள்ள புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் பத்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு திருவிழா விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
குறித்த வீதியில் உள்ள மகிந்தகுமார் என்பவரினால் அமைக்கப்பட்ட இந்த ஆலயம பிரதேச மக்களினால் பராமரிக்கப்பட்டுவரும் நிலையில்  வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இன்று மாலை அருட்தந்தை நிக்சன் ஜுட் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது திருச்சொரூபம் பவனி நடைபெற்றதுடன் அடியார்களுக்கு ஆசிர்வாதம் வழஙகும் நிகழ்வும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த திருவிழா நிகழ்வின்போது பெருமளவான பக்த அடியார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.