கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் திறப்பு விழா

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் திறப்பு விழா மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் நடைபெற்றது.

இதுவரை காலமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இயங்கிவந்த காரியாலயம் இன்று மட்டக்களப்பு புகையிரத வீதியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட முன்பள்ளி பணியக பணிப்பாளர்கள்,பணியக உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.