தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் களுதாவளை இளைஞன் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று இரவு 10.00மணியளவில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மின்சார தூணில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக பிரதேச தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்தின்போது களுதாவளையை சேர்ந்த இளைஞனே படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.