(லியோன்)
மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளின் ஏற்பாட்டில் சிறைச்சாலை பிரதான அத்தியட்சகர் கே
.எம் . யு , எச் . அக்பர் தலைமையில்
மாபெரும் இரத்ததான முகாம் (06) சனிக்கிழமை காலை நடைபெற்றது .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில்
நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம்
ஏற்பாடு செய்யப்பட்டது.
அரச அதிகாரிகள் ,அலுவலக உத்தியோகத்தர்கள் சமூக
சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலை
அதிகாரிகளினால் பல சமூக பணிகளை முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது
இதன்கீழ் 06.08.2016 காலை 10.00 மணி முதல் நண்பகல்
01.00 மணிவரை இந்த இரத்ததான
முகாம் நடாத்தப்பட்டது
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்
இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் யசிந்து
பெனாண்டோ மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையினால் ஏற்பாடு செய்யப்பட
இந்த இரத்ததானத்தினை கௌரவிக்கும் வகையில் சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கு இரத்த
வங்கி பிரிவினால சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது .
.