(லியோன்)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான முன் ஆயத்த வினா பத்திரங்கள் தொடர்பாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தெரிவித்தார் .
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான முன் ஆயத்த வினா பத்திரங்கள் தொடர்பாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தெரிவித்தார் .
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் 11.08.2016 மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது
இவ்வாறு வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார் .
2016 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை
தயார்படுத்தும் வகையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் வலயத்திற்குட்பட்ட பாடசாலை
மாணவர்களுக்கு வழிகாட்டல் பரீட்சைகள் நடத்தப்பட்டு வருகின்றது .
இவ்வாறு நடத்தப்படுகின்ற பரீட்சைகள் மாணவர்களை சீரழிப்பதாக அண்மையில் இணையத்தளங்களில் சில தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
உண்மையிலே
அவ்வாறான வினா பத்திரம் தயாரிக்கப்படவில்லை, அது பரீட்சையும் இல்லை . அது மாணவர்களுக்காக
வழங்கப்படும் வினா கூற்றுத்தொகுதி அது மாணவர்களின் பயிற்சிக்காக வழங்கப்பட்டது .
கடந்த காலங்களிலே மாணவர்களை பயிற்றுவிக்கும் பொழுது மாணவர்கள் சில
பகுதிகளிலே தவறுகள் விடப்பட்டத்தினால் அவற்றினை தொகுத்து ஒரு வினா பத்திரமாக
மாணவர்களுக்கு கொடுத்து பயிற்றுவிக்கப்பட்டனர் .
அதில் சில சிறிய தவறுகள் இருந்துள்ளது . அதேவேளை இந்த வினா
பத்திரங்கள் ஆசிரியர் கைநூல் . கடந்த கால வினா பத்திரங்களுடன் இணைந்ததாகவே வினா
பத்திரங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது .
இது பெரிய வகுப்பு மாணவர்களின் அறிவை கொண்டதாக வினாக்கள் இல்லை .இதற்கான
ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது .
இவ்வாறு அந்த வினா
பத்திரங்கள் இருக்கின்ற பொழுது மாணவர்களை குழப்புகின்ற விடயங்களும் அதற்காக
கூறப்படுகின்ற காரணங்களும் எமக்கு கவலை அளிக்கின்றது .
எனவே இவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் தவறான விடயமாகும் ,
இவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி
முற்றிலும் தவறானது என்பதனை மாணவர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் தெரிவிக்கும் வகையிலே இந்த ஊடகவியலாலார்களுடனான சந்திப்பு ஏற்பாடு
செய்யப்பட்டதாக மட்டக்களப்பு வலையக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார் .
11.08.2016 மாலை
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வலயக்கல்விப்
பணிப்பாளர் . உதவி கல்விப் பணிப்பாளர்கள் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் உட்பட பலர்
கலந்துகொண்டனர் .