தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி வினா பத்திர பயிற்சி கருத்தரங்கு

(லியோன்)

2016 ஆம்  ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள   மாணவர்களுக்கான முன்னோடி பயிற்சி வினா பத்திர  கருத்தரங்கு மட்டக்களப்பு கரடியனாற்றில் நடைபெற்றது .


மட்டக்களப்பு  தேசிய சேமிப்பு வங்கியின் வங்கி ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று மேற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான  இலவசமாக முன்னோடி வினா பத்திரத்துடனான  பயிற்சி  கருத்தரங்கு   11.08.2016  வியாழக்கிழமை   மட்டக்களப்பு கரடியனாறு இந்து மகா வித்தியாலயத்தில் காலை 09.00 மணி முதல் நண்பகல் வரை நடைபெற்றது .

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட வளவாலர்களை கொண்டு நடத்தப்பட்ட   இலவச கருத்தரங்கில் சுமார் 250 மாணவர்கள்  கலந்துகொண்டதுடன் இந்நிகழ்வில் மட்டக்களப்பு கிளை முகாமையாளர்  எஸ் .வி . சுவேந்திரன் மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .