வாகரையில் இரால் பண்ணை திட்டத்திற்கு மீண்டும எதிர்ப்பு தெரிவிக்கும் பொது அமைப்புகள்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கடல்தறை அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள்  மற்றும் பொது அமைப்புகள் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இது குறித்து நேற்று மாலை மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வாகரை பிரதேச மீனவர் சங்கங்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது எதிர்ப்புக்களை பதிவுசெய்திருந்தனர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வாகரை மீனவர் சங்கத்தின் தலைவர் மு.சுப்ரமணியம் கருத்து தெரிவிக்கும் போது,

நாங்கள் கைவிடப்பட்டதாக எண்ணியிருந்த வாகரை இறால் பண்னை அமைக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பத்திரிகைவாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த இறால் பண்னை அமைக்கும் தி;ட்டத்திற்கு மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.இது தவறான செய்தி.இதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

இந்த இரால் பண்ணை அமைக்கப்படுவதனால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொள்வர்.கண்டல் தாவரங்கள் பாதிக்கப்படுவதுடன் வீச்சுவலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொள்வார்கள்.இரால் பண்ணை நடாத்தும்போது அங்கு பாவிக்கப்படும் நச்சுபதார்த்தங்கள் உப்பாறில் கலக்கும் நிலையேற்படும்.இதன்காரணமாக இரால் முட்டைகள் அழிந்து இரால் பிடிப்பில் ஈடுபடுவோர் தொழில் இழக்கும் நிலையேற்படும்.

அத்துடன் அந்த நஞ்சு தண்ணீர் ஏனைய இடங்களுக்கும் பரவி புல்பூண்டுகள் கூட முளைக்காத நிலையே ஏற்படும்.இதன் காரணமாக குறித்த பிரதேச மக்களாகிய நாங்கள் இதனை முழுமையாக எதிர்க்கின்றோம்.
வாகரை பிரதேச இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பினை கருத்தில்கொண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கவேண்டுமானால் அங்கு ஒரு ஆடைத்தொழிற்சாலையினை நிறுவமுடியும்.அதன் மூலம் வேலைவாய்ப்பினை எமது இளைஞர் யுவதிகள் பெற்றுக்கொள்ளமுடியும்.

எமது பிரதேசத்தினை சேர்ந்த பல யுவதிகள் கொழும்பு போன்ற பல பகுதிகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்று பல்வேறு துர்ப்பாக்கிய நிலைக்கும் தளப்பட்டிருந்தனர்.இவ்வாறானவர்களை கருத்தில்கொண்டு பல்வேறு தொழிற்சாலைகளை இப்பிரதேசத்தில் ஆரம்பிக்கமுடியும்.
எனவே இந்த திட்டத்தின் வாகரை பிரதேச மீனவர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தாக வெளியாகியுள்ள செய்தினை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம்.

இந்த திட்டம் தொடர்பில் எங்களுடன் எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை.அந்த திட்டம் வந்தது தொடர்பில் எங்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.எங்களுக்காக குரல்கொடுக்க எந்த அரசியல்வாதியும் முன்வருவதில்லை.எங்களுக்கு ஓரு கட்சியுள்ளபோதிலும் எவரும் முன்வந்து இது தொடர்பில் குரல்கொடுப்பதாக தெரியவில்லை.

இந்த இரால் பண்ணையை உருவாக்கி அதன்மூலம் இங்குள்ள மக்களுக்கு போசாக்கான உணவினை வழங்குவோம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.இந்த இரால் பண்ணையால் கொழுத்த வியாபாரிகளே நன்மையடைவார்களே தவிர இப்பிரதேச மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

இந்த திட்டம் தொடர்பில் நாங்கள் பல போராட்டங்களை கடந்த காலத்தில் நடாத்தி எங்களது எதிர்ப்பினை தெரிவித்தபோதிலும் மக்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாமல் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.என்றார்.

பால்சேனை கிராம அபிவிருத்தி சங்க செயலாளர்,

வாகரை பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கம் வாகரையில் இரால்வளர்ப்புதிட்டம்,சூழலியல்பூங்கா,மீனவ பண்ணை என மூன்று தளங்களில் இவ்வாறான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன.

நாங்கள் இந்த திட்டத்தினை ஆரம்பமுதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்துவருகி;ன்றறோம்.இதன் ஒரு கட்டமாக பனிச்சங்கேணி பாலத்தினை மறித்து வீதி மறியல் போராட்டமும் நடாத்தப்பட்டது.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த செயற்றிட்டம் தொடர்பில் வாகரை பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.நல்லாட்சி என்று சொல்லும் இந்த காலப்பகுதியில் இவ்வாறான சம்பஙகள் நடைபெறுவது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம்.

உண்மையில் இப்பகுதியில் உள்ள மக்களின் நன்மை கருதி ஏதாவது செய்யவேண்டுமென்ற நினைப்பவர்கள் வாகரை பிரதேசத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி அப்பிரதேச மக்கள் நன்மையடையவும் வகையில் செயற்படவேண்டுமே தவிர அப்பகுதியில் உள்ள வளங்களை அளித்து அந்த மக்களை இன்னுமின்னும் வறுமையானவர்களாக மாற்றுவதற்கு அனுமதிக்கமாட்டோம்.

வாகரை பிரதேசத்தில் உள்ள ஒரு சிலரின் கருத்துகளை மட்டும்கொண்டு முற்றுமுழுதாக வாகரை பிரதேச மக்களின் கருத்தாககொள்ளமுடியுhது.அனைத்து மக்களின் கருத்துகளையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

எமது எதிர்ப்பினையும் மீறி இந்த திட்டத்தினை அமுல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டால் வாகரையில் உள்ள அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராடுவோம்.

பல்கலைக்கழகம் மற்றும் சில ஆய்வாளர்களுடன் இது தொடர்பில் ஆராய்ந்தபோது இந்த திட்டம் பாதகமானது என்பதை கருத்தியல் ரீதியாக அறிந்துகொண்டோம்.இந்த திட்டம் எதிர்கால சந்ததியினரை கடுமையாக பாதிக்கும் திட்டமாகவே உள்ளது.

இவ்வாறான திட்டங்கள் காரணமாக இன்று வடமத்திய மாகாணங்களில் பாரிய குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதையும் அறியமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாவிகள் காணப்படுகின்றன.
கல்லடி,கல்குடா,பனிச்சங்கNணி.இந்த மூன்று வாவிகளையும் ஆய்வுசெய்யும்Nபுhது வாகரை பகுதியில் உள்ள வாவியில் பெறப்படும் கடலுனவே நச்சுத்தன்மையற்ற உணவாக காணப்படுகின்றது.இந்த இரால் வளர்ப்பு திட்டம் நடைபெற்றால் இந்த தன்மையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் வாகரை பிரதேசத்தினை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.