(லியோன்)
மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியந்தீவு புனித மரியாள் பேராலய வருடாந்த
திருவிழா கொடியேற்ற நிகழ்வு 06.08.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில்
பங்கு தந்தை அருட்பணி எ .தேவதாசன் தலைமையில்
இடம்பெற்றது .மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து திருச்செபமாலையும் ,
விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது .
இன்றைய நவநாள் திருப்பலியை மட்டக்களப்பு தேத்தாதீவு பங்கு தந்தை
நிர்மல் சூசைராஜ் அடிகளார் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது
திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு
திருச்செபமாலையும்
,திருப்பலியும் இடம்பெறும்.
எதிர்வரும் 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு திரு அன்னையின் திரு உருவம் பவனியாக வழமையான
வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு, ஆலயத்தில் விசேட திருப்பலியும்
,திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும்
இடம்பெறும் .
15.08.2016 திங்கள் கிழமை காலை 07.00
மணிக்கு மட்டக்களப்பு
மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட திருநாள்
திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெறும் .