இந்துக்களின் மிகவும் பிரசித்திபெற்ற தினங்களில் ஒன்றான ஆடிப்பூர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆடிப்பூரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி நடைபெற்றது.
இந்துக்களின் கலாசார நிகழ்வுகளுடன் மேளதாளங்கள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் பால்குடங்களை ஏந்திவர இந்த பாற்குட பவனி நடைபெற்றது.
பாற்குட பவனியை தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகளும் அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன.
இதேபோன்று மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்திலும் இன்று ஆடிப்பூர நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆடிப்பூரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி நடைபெற்றது.
இந்துக்களின் கலாசார நிகழ்வுகளுடன் மேளதாளங்கள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் பால்குடங்களை ஏந்திவர இந்த பாற்குட பவனி நடைபெற்றது.
பாற்குட பவனியை தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகளும் அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன.
இதேபோன்று மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்திலும் இன்று ஆடிப்பூர நிகழ்வுகள் நடைபெற்றன.