காலில் வலை சிக்கியதால் யானையின் தாக்குதலுக்குள்ளானவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, சந்தனமடு ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர், புதன்கிழமை (03) மாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிப் பலியாகியுள்ளார்.
சுpத்தாண்டி,நாவலர் வீதியைச் சேர்ந்த தந்தையான நான்கு பிள்ளைகளின் குமாரன் யோகநாதன் (வயது 48) என்பவரே யானையின் தாக்குதலுக்குள்ளானார்.

வழமைபோன்று இவர் குறித்த ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு நீர் அருந்துவதற்காக வந்த யானை தாக்கியுள்ளது.

யானையை கண்டு மீன்பிடித்துக்கொண்டிருந்தவர் ஓடமுற்பட்டபோதிலும் காலில் வலை சிக்குண்டநிலையில் யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவாகியும் இம்மீனவர் வீடு திரும்பாமையை அடுத்து, அவரை உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போதே குறித்த மீனவர் யானையின் தாக்குதலுக்குள்ளானமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.