இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் தரம் 5 புலமைப்பரிசில்
மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில்
இன்று (16.08.2016) இடம்பெற்றது. 370 மாணவர்கள் கலந்துகொண்ட இக் கருத்தரகு
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் அவர்களால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
அங்கு கருத்து தெரிவித்த இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின்
தலைவர் இ.சாணக்கியன் அவர்கள் பிரதேசத்தின் கல்விக்காக தாம் பல திட்டங்களை
செயற்படுத்துவதாகவும் எதிர்காலத்தில் இன்னும் பல ஆயிரக்கணக்கான
மாணவர்களுக்கு இவ்வாறான உதவிகள் வழங்கப்படுவதுடன் குறித்த மாணவர்கள்
புலமைப்பரீசில் பரீட்சையில் சித்தியடையும்பட்சத்தில் கல்விக்கான
செலவுகளையும் தாம் வழங்கவுள்ளதோடு விதவைகளுக்கான சுயதொழிலை
ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டத்தையும் தமது அமைப்பு முன்னெடுத்து
வருவதாகவும்.
பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களும் விதவைகளும் தமது
அமப்புடன் தொடர்புகொள்ளும்படியும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர்
இ.சாணக்கியன் அவர்கள் குறிப்பிட்டார்.