திருகோணமலை மாவட்டத்தினை கலங்கடித்த வெருகல் பிரதேச செயலக அணி கொழும்பு பயணம்

திருகோணமலை மாவட்ட கபடிப்போட்டியில் வெற்றிபெற்ற வெருகல் பிரதேச செயலக கபடி அணியினர் இன்று வெள்ளிக்கிழமை தேசிய மட்ட போட்டியில் கலந்துகொள்ள இன்று கொழும்புக்கு பயணமாகினர்.
அவர்களை வெருகல் பிரதேச செயலக பிரதேச செயலாளர் தயாபரன் வாழ்த்துகள் தெரிவித்து வழியனுப்பிவைத்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் அதிகளவில் உள்ள வெருகல் பிரதேசத்தில் விளையாட்டுத்துறையில் அண்மைக்காலமாக இளைஞர் யுவதிகள் அதிகளவில் திறமைகளை வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.