கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுதினம் அனுஸ்டிக்க ஏற்பாடு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைபகுதிகளில் மற்றும் இரால்வளர்பு பண்ணையிலும் கடந்த 1987ஐனவரி 28ம் திகதிபடுகொலை செய்யப்பட்ட பொதுமக்களைநினைவு கூரும் 29வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 28ஃ01ஃ2016,வியாழக்கிழமை பிற்பகல் 2மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மட்டக்களப்புமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தலைமையில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசுக்கட்சி கிளையின் ஆதரவில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்.   கௌர சிவஞானம்-சிறிதரன் அவர்கள்                 "மறந்தாலும் மண்ணும் இரையாகும்"எனும் தலைப்பில் நினைவுப்பேருரை ஆற்றவுள்ளார்.

சிறப்பு கவிஞரங்கம்"வாழ்வை நோக்கி,,,,,!" தலைமைக்கவிஞர்:அரசையூர் மேரா தலைமையில் அரங்ககவிஞர்களான :கவிஞர் :முருகு தயாநிதி,கவிஞர் :சொலையூரான் தனுஷ்கரன், கவிஞர்:அழகு தனு,கவிஞர்: மேகராசா,கவிஞர் :செல்வி ந.தர்ஷினி
,கவிஞர் :மயில் சூரியகுமாரன் ஆகியரோர் கலந்து கவிதைமழை பொழிகின்றனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாண சபை அஅமைச்சர்கள் கிழக்குமாகாணசபை உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் அதிதியாக சிறப்பிக்கும் நிகழ்வில்

கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஷ்வர ஆலய குரு சிவஸ்ரீ வ.சோதிலிங்கம் குருக்கள் ஆசிஉரையுனையும் பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் சி.புஷ்பலிங்கம் தொடக்கவுரையும் பொருளாளர் பி.நீதிதேவன் வரவேற்புரையும் செயலாளர் த.தியாகராசா நன்றியுரையும் இடம்பெறும்

உயிர்நீத்த உறவுகளால் நினைவுத்தீபம் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வணக்கநிகழ்வு இடம்பெறவுள்ளது.

வருடாவரும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசுக்கட்சி கிளையின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அன்றய தினம் பட்டிப்பளை பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் விஷேடபூசைகளும் பகல் வேளைகளில் இடம்பெறவுள்ளதாகவும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசுக்கட்சி செயலாளர் த.தியாகராசா தெரிவித்தார்.