உழவர் திருநாளை முன்னிட்டு ஆலயங்களிலும் இல்லங்களிலும் விசேட பூசை நிகழ்வுகள்

(லியோன்)

தமிழர்களின் முக்கிய பண்டிகையான உழவர் திருநாளாம்  தைத்திருநாளை   உலகெங்கும் உள்ள தமிழர்கள் மிக சிறப்பாக கொண்டாடினர்.



உழவர் திருநாளை முன்னிட்டு நாடளாவியல் ரீதியில் ஆலயங்களிலும், இல்லங்களிலும்  விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன .



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் , இந்து ஆலயங்களிலும் அனைத்து இல்லங்களிலும் உழவர் திருநாள் சிறப்பு பூசை வழிபாடு நிகழ்வுகள்  இடம்பெற்றது .

இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்திலும் ,  இருதயபுரம் ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலயத்திலும் சிறப்பு உழவர் திருநாள் வழிபாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.


இடம்பெற்ற சிறப்பு பூசை வடுபாடுகளின்  போது  நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்  ஆசிவேண்டி விசேட பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

இந்த வழிபாடுகளில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் உழவர் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.  

இதேவேளை இந்துக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு  வைத்து நன்றி செலுத்தியதோடு  ஆலயம் சென்று பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு  உழவர் திருநாள் வாழ்த்துக்களை உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ,அயலவர்களுக்கும் தெரிவித்துகொண்டனர் .