மட்டக்களப்பில் தைப்பொங்கல் வழிபாடுகள்

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான தைத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு,அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை விசேட பூசைகள் நடைபெற்றன.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு ஸ்ரீரங்கவரதராஜ குருக்களின் தலைமையில் இந்த வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டியும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வழிபாடுகளில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டதுடன் தமக்கிடையில் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

இதேவேளை தைத்திருநாளை முன்னிட்டு வீடுகளில் இந்துக்கள் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.