2015 ம் வருடத்த்தின் முதலாம் தரத்துக்கான மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நாடு முழுவதும் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதற்கமைய கல்முனை கிறீன்பீல்ட் றோயல் வித்தியாலயத்தில் முதலாம் தரத்துக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வித்தியாரம்ப விழா நேற்று பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் தலைமையில் இடம்பெற்றது.
புதிதாக வருகைதந்த மாணவர்களை தற்போது இரண்டாம் தரத்தில் கல்விபயிலும் மாணவர்கள் மாலையிட்டு, இனிப்புப் பண்டங்கள் வழங்கி வரவேற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் இப்பாடசாலைக்கான பாடசாலை மேன்பாட்டு இணைப்பாளர் எம்.சைனூன் கலந்து கொண்டதுடன் பாடசாலை ஆசிரியர்கள், மணவர்கள் ,அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.