மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்தடைந்தன.


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் உள்ள 100 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் வந்தடைந்தன.

களுவாஞ்சிகுடி,வெல்லாவெளி,பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த பட்டிருப்பு தேர்தல் தொகுதி உள்ளது.

பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் அனைத்துப்பகுதிக்குமான வாக்களிப்பு பெட்டிகள் இன்று பிற்பகல் வந்தடைந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் மத்திய நிலையமாகக் காணப்படும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 172497 பேரும், கல்குடா தேர்தல் தொகுதியிலிருந்து 105055 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 87611 பேருமாக மொத்தம் மட்டக்களப்பு மாவடத்தில் 365163 பேர் இம்முiறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி பி.எஸ்எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்காக 365,163 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவடத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளததையும் அவதானிக்க முடிகின்றது.