நாவலடிப்பகுதியில் உள் நுழைந்த கடல் அலைகள் -மீனவர் வாடிகள் சேதம்


(துசி)

மட்டக்களப்பின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக மக்கள் அச்ச நிலைக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடிப்பகுதியில் கடல் அலைகள் நீண்டதூரம் வந்ததன் காரணமாக பெரும் அச்ச நிலையேற்பட்டுள்ளது.

இதன்போது மீனவர்களின் இரண்டு மீன் வாடிகளும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற் தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்தார்.

கடல் அலைகள் நீண்ட தூரம் வந்ததன் காரணமாக இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் அச்ச நிலைக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.

கடல் தற்போது கொந்தளிப்பு நிலையில் இருப்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.