களுவாஞ்சிகுடி பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை(29.12.2025) முற்பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் அப்பகுதியில் கடமையிலீடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.