மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று கைதொலைபேசியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உரையாடிக் கொண்டிருந்தபோது ரயில் மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த நாகேந்திரன் கரிகரராஜ் (வயது-23) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டு மனைவியுடன் தொலைபேசியில் சண்டைபிடித்துக் கொண்டுள்ள நிலையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த ரயிலில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு ரயில் கொழும்பு நோக்கி பிரயாணித்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் மற்றும் கொக்குவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.