திருப்பழுகாமத்தில் “வள்ளி திணைப்புனம்"

மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில்  சிறார்களை கொண்டு புதிதாக பழகிய “வள்ளி திணைப்புனம்" எனும் கரகாட்டத்தினை திருப்பழுகாமம் இத்தியடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாம கிராமத்தில் உள்ள  சிறுவர்களைக் கொண்டு பழக்குவிக்கப்பட்ட "வள்ளி திணைப்புனம்"  கரகம் அரங்கேற்ற விழா நேற்று (04-08-2025) ஆம் திகதி மாலை  திருப்பழுகாமம் விபுலானந்தபுரம் இத்தியடி நாகதம்பிரான் ஆலய முன்பாக  இடம் பெற்றன.

இக்கரகத்தினை திருப்பழுகாமம் "கரகாட்ட திலகம் வடிவேல்" மகன்  கலைஞர் புவிராஜ் அவர்களின்  படைப்பில் உருவான "வள்ளி தினைப்புனம்"எனும் கரகாட்ட அரங்கேற்ற நிகழ்வானது இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

திருப்பழுகாமம் மண்ணில் மருவிப்போன கரகாட்டம் புத்துயிர் கொடுக்கும் முகமாக  நேற்று(04-08-2025)ஆம் திகதி திங்கற் கிழமை இரவு இடம்பெற்றன.

ஆரம்பிக்கும் முகாமாக  இறைபதம் அடைந்த "கரகாட்ட திலகம் வடிவேல்"அவர்களின் உருவப்படத்திற்கு பூமாலை அனிவிக்கப்பட்டன.

இந்தநிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் பழுகாமம் வட்டார உறுப்பினர் சு.விக்கினேஸ்வரன்,கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சச்சிதானந்த குருக்கள் ,பாடசாலை ஆசிரியர்கள்,ஆலய நிருவாகத்தினர்,பொதுமக்கள்,  கலந்துகொண்டனர்.

கரகாட்ட நிகழ்வினை பார்வையிட அதிகளவிலான பொதுமக்கள் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.