சத்துக்கொண்டான் படுகொலைக்கு நீதிகோரும் உறவுகள் -குற்றவாளிகள் தண்டிக்கவேண்டும் எனவும் கோரிக்கை


கிழக்கில் ஊர்காவல் படையினராலும் இராணுவத்தினராலும் நடாத்தப்பட்ட மிகப்பெரும் படுகொலையான சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் அந்த படுகொலை நடைபெற்றதான இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர்; வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு  இருக்கின்றனர். 

இலங்கை ராணுவத்தினராலும். முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்றது. இந்த படுகொலையில் நேரடியாக பாதிக்கப்பட்டவன் என்ற சார்பில் இந்தப் படுகொலைக்கு விசாரணை வேண்டும் அத்தோடு புதிய அரசாங்கத்தில் படுகொலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றது. 

உதாரணமாக செம்மணி படுகொலை தோண்டப்பட்டு இருக்கின்றது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகக் கொடூரமாக நடந்த படுகொலை என்றால் சத்துருக்கொண்டான் படுகொலை இந்த படுகொலை சத்துருக்கொண்டானில் அமைந்த ராணுவ முகாமில் 184 பேரை அழைத்து கொண்டு செல்லப்பட்டு வாளாளும் கத்தியாலும் வெட்டி டயர்கள் போட்டு எரித்து இன்று இதற்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை. 

இரண்டு ஆணை குழுவில்  நான் சாட்சிகள் தெரிவித்துள்ளேன் ஒன்றும் சந்திரிகா அம்மையார் கால ஆனைகுழுவில் சாட்சிகள்  தெரிவித்திருந்தேன் ஆனால் இன்றும் நீதி கிடைக்கவில்லை. இதில் நேரடியாக சந்திரிகா  அம்மையார் ஒரு ஆனைக்குழுவை நிறுவி இதில் ஓய்வு பெற்ற ஒரு நீதி அரசர் பாலகிட்ணர். விசாரணை செய்ததில் நான்கு இலங்கை ராணுவத்தினர் இனங்காணப்பட்டு பெயர்களும் இங்கே கூறப்பட்டது. 

இதில் முக்கியமான சூத்திரதாரி பிரிகேடியர் பேர்சி பெனாண்டோ, கேப்டன் ஹெரத், கேப்டன் வர்ணகுலசூரிய,  கேப்டன் விஜயநாயக்க  இந்த நால்வரும் அந்த ஆணைகுழுவால் இவர்கள்தான் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி என்று இனங்காணப்பட்டு இதுவரைக்கும் எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை. 

எனவே இந்த படுகொலையை உடனடியாக இந்த புதிய அரசாங்கம் இதனை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். உள்நாட்டு விசாரணையில் எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. இதனை சர்வதேச விசாரணைக்கு கொண்டு சென்று விசாரணை செய்ய வேண்டும். 

அதே நேரத்தில் இந்த படுகொலை தற்பொழுது அந்த முகாம் அமைந்திருந்த இடத்தில் அகழ்வு செய்தால் நிறைய எலும்புக்கூடுகள் எடுக்கலாம் என்பதனை கேட்டுக்கொண்டு இந்த பாதிக்கப்பட்டவன் எனது அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்காவின் பிள்ளைகள் மூன்றும், அம்மம்மா, என எனது எனது குடும்பத்தில் 10 பேர் படுகொலைசெயய்யப்பட்டுள்ளனர். இதனை சர்வதேசம் விசாரணை செய்ய வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கேட்டுக் கொள்கின்றோம்.

09.09.1990ஆம் ஆண்டு இந்த படுகொலை எவ்வாறு இடம் பெற்றது என்றால் சத்துருக்கொண்டான் பணிச்சையடி பிள்ளையாரடி கொக்குவில் ஆகிய கிராமங்களில் அந்த நேரம் ஏற்கனவே முஸ்லிம் ஊர் காவல் படையினர்கள் வந்து. எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று எல்லாம் புலனாய்வு செய்து  அனைத்து மக்களையும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதனால் இதற்கு நீதி கிடைக்க வேண்டும் சர்வதேச விசாரணைக்கு கொண்டு போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் மற்றும் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினருமான தயாளகுமார் கௌரி,
 
கடந்த காலங்களில் நடைபெற்றது இதில் அதிகமாக உங்களுடைய தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்த உண்மை.

தற்பொழுதுஇந்த இலங்கையில் ஆட்சி மாற்றம் வந்த பொழுது. பல படுகொலைகளுக்கான நீதிகள். வேண்டப்பட்ட நிலையில் குறிப்பாக செம்மணி படுகொலைக்கான. செம்மணி புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. 

இந்த சந்தர்ப்பத்தில் மனித உரிமைகளின் ஆணையாளர்  விஜயம் மேற்கொண்டு போது. இதற்கான நீதிகளை எங்களுடைய இழப்புகளை சந்தித்த சமூகம் எதிர்பார்த்து இலங்கைக்கும் இதற்கான நீதி  கிடைக்காது என்ற பட்சத்தில் அந்த ஆணையாளரின்  வருகையை நம்பி இதற்கான ஒரு சிறந்த பொறிமுறை கையாளப்படும் என எதிர்பார்த்து இருந்தது ஆனால் அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பு ஏமாற்றத்தினை சந்தித்த ஒரு நிலையாக நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. 

ஏனென்றால் உள்நாட்டிற்குள்ளே இதற்கான. ஒரு முறைகள் தீர்வுகள் எட்டப்படும் என்ற நிலை தான் அவரின் கருத்தாக அமைகிறது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின்பல கூட்டு படுகொலைகள்  நடந்திருக்கின்றது அதில் குறிப்பாக சத்துருக்கொண்டான் படுகொலையானது 1990 ஆம் ஆண்டு ஒன்பதாம் தேதி ஒன்பதாம் மாதம் நடைபெற்றது  இந்த படுகொலை நடந்த பொழுது எனக்கு நான்கு வயது. 

அதாவது இந்த படுகொலையில் உயிர் இழந்தவர்கள்  186 பேர் சத்துருகொண்டான் ராணுவ முகாமில் படுகொலை செய்யப்பட்டதாக உங்களுடைய கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இதில் நேரடியாக பாதிக்கப்பட்ட எங்களுடைய குடும்பம் சார்ந்தவர்கள் இந்த சம்பவங்களைச் சொல்லி கேட்டு வளர்ந்தவள் என்ற ரீதியில். 09.09 1990. சத்துருக்கொண்டான் பிள்ளையாரடி பணிச்சையடி கொக்குவில் ஆகிய நான்கு கிராமங்களில் யுத்தம் நடைபெற்ற இருந்த காலப்பகுதிகளில் ஒன்று கூடல் என்ற பெயரில் மாலை வேலை எங்களுடைய அப்பாவி பொதுமக்களை ராணுவ முகாமுக்கு அழைத்து சென்று வழமை போல் ஒன்று கூடல் நடத்துவார்  வீட்டுக்கு திரும்பவும் வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் அந்த கிராமப் பகுதியில் இருந்தவர்கள் நகர்ப்புறங்களில் வந்து பாடசாலை முகாம்களில் சில குடும்ப அங்கத்தவர்கள் தரித்திருப்பார்கள் தங்களுடைய காணிகளை வீடுகளைப் போய்  வந்துவிடலாம் என்று அங்கு நின்றவர்களை மாலை வேலை ஒன்று கூடல் என்ற பெயரில் அழைத்துச் சென்று மிகவும் மோசமான நிலையில் சிறுவர்கள் உட்பட கர்ப்பிணி தாய்மார்கள் வயோதிபர்கள் இளைஞர்கள் பெண்கள் அனைவரையும் படுகொலை செய்யப்பட்டதாக அந்த சாட்சியங்கள் நேரடியாக அந்த ஆணைகுழுவின் மூலம் வெளிக்கொணரப்பட்டபோதும் இன்று வரை அந்த சம்பவம் எந்தவித நீதி. கிடைக்காமல் அப்படியே கிடப்பாக இருக்கின்றது. 

அதேபோல எனது அப்பா அம்மா இந்த நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய முகாம்களுக்கு அழைத்துச் சென்று வந்த பின்பு தான் இந்த சம்பவம் நடந்தது குறிப்பாக எனக்கு நான்கு வயது என்னுடன் பக்கத்து வீட்டில் விளையாடிய சிறு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டனர் அதேபோல நானும் அங்கு சிறிது நேரம் இருந்திருந்தால் நானும் படுகொலை செய்யப்பட்டிருப்பேன். அதில் நானும் ஒரு நபராக தான் இருந்திருப்பேன். இன்று வரை நான் இருக்கின்றேன் என்றால் இந்த நீதிக்கான வழிமுறை  செய்யப்பட்டு சர்வதேச விசாரணைக்கு செல்ல வேண்டும் அழிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். 

ஏனென்றால் என்னுடைய வயது இந்த நீதிக்கான காலதாமதம் என்பதனை இந்த இடத்தில் கூறிக்கொண்டு குறிப்பாக இந்த கூட்டு படுகொலைகள் நடந்தமைக்கான சாட்சியங்கள் அழிக்கப்பட்ட  நபர்கள் சாட்சியங்கள் உரியவர்கள் தற்சமயம் பேசியிருந்தார்கள். 

இனியும் தாமதம் இல்லாமல் இதற்கான தற்போதைய ஆட்சியில் இருக்கும் இந்த ஜனாதிபதி செம்மணி படுகொலை தோண்டப்படுவது போல் இந்த சத்துருக்கொண்டான் படுகொலையும் தோண்டப்பட்டால் அங்கு எங்களுடைய எதிர்த்து  சூறையாடப்பட்ட எலும்புக்கூடுகள் உங்களுடைய உறவுகளின் அடையாளங்கள் அங்கு தோண்டி எடுக்கப்படும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

ஆகவே இதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதனை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.