குறித்த வைத்தியசாலையில் வாட் ஒன்றின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா ஒன்றை சம்பவ தினமான வியாழக்கிழமை (10) இரவு அங்கு கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவர் கழற்றியமை சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனை அவதானித்த வைத்தியசாலை நிர்வாக பணிப்பாளர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.