புன்னக்குடா விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் அப்பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவர் சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.