தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டியில் சாதனை பதித்த சிவானந்தா தேசிய பாடசாலை


தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டியில் சாதனை பதித்த சிவாநந்தா தேசிய பாடசாலையின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.நிகழ்வானது பாடசாலையின் அதிபர் தயாபரன் அவர்களின்  தலைமையில் இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் பழைய மாணவர் சங்க தலைவர் வ. வாசுதேவன் , மல்யுத்த பயிற்றுவிப்பாளர் வே. திருச்செல்வம் , பழைய மாணவர் சங்க உறுப்பினரும் எமது பாடசாலையின் முன்னாள் ஆசிரியரான திருமதி. ஹ. திலகவதி அவர்களும், சான்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவரான சி  . பார்த்தீபன் அவர்களும் கலந்து கொண்டதுடன் இம்முறை மாணவர்களுடன் இணைத்து பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இவ் நிகழ்வினை பாடசாலையின் பிரதி அதிபர் குலேந்திரகுமார் ஒருங்கிணைத்திருந்தார்.
மல்யுத்த போட்டியில் கடந்த முறை தேசிய மட்டத்தில் 5 பதக்கங்களை பெற்றதுடன் இம்முறை 8 பதக்கங்களாக அதிகரித்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.