மொட்டு கட்சிக்கு மட்டக்களப்பில் அலுவலகம் திறந்தவர் சஜித்துடன் இணைவு


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில்இணைந்து கொண்டுள்ளார்.நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுவந்த ப.சந்திரகுமார் என்பவரே இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
இந்நிலையில், எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச கட்சி அலுவலகத்தில் வைத்து சம்பிரதாய பூர்வமாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை வழங்கி வைத்துள்ளார்.
கடந்த மாதம் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் பொதுஜன பெரமுனவின் அலுவலகம் இவரின் தலைமையில் திறந்துவைக்கப்பட்ட நிலையிலேயே இவர் சஜித் பக்கம் தாவியுள்ளார்.