ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவ கொடியேற்றம்


கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்கதும் ஆதிவேடுவர்களின் குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்ததுமான மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு குமாரத்தன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
மட்டக்களப்பு நகரில் ஆதிகாலத்தில் வேடுவர்களினால் குலதெய்வதாக கொண்டு வழிபடப்பட்ட இந்த ஆலய என்ற பெருமையினையும் அற்புதங்களைக்கொண்ட ஆலயமாகவும் கருதப்படுகின்றது.
மஹோற்சவகால பிரதமகுரு சிவஸ்ரீ செ.கு.உதயகுமார குருக்கள் தலைமையில் இன்று காலை உற்சவ கிரியைகள் ஆரம்பமானது.
நேற்று மாலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றதுடன் இன்று காலை விசேட பூஜைகளுடன் கிரியைகள் ஆரம்பமானது.
இதன்போது விசேட கும்பபூஜை,யாக பூஜை நடைபெற்று மூலவருக்கு அபிசேகம் ஆராதனை நடைபெற்றதுடன் கொடிச்சீலைக்கும் வசந்த மண்டபத்திலும் விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து கொடிச்சீலையும் முருகப்பெருமானும் கொடித்தம்பத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
கொடிச்சீலைக்கான பூஜைகள் தம்பத்தில் நடைபெற்று பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு வேத,நாத மேள இசை முழங்கள் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
18ஆம் திகதி மாலை முருகப்பெருமானின் தேர் உற்சவம் நடைபெறவுள்ளதுடன் மறுதினம் திங்கட்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.