உள்ளுராட்சிமன்றங்களில் தற்காலிகமாக சேவையாற்றிவரும் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் நகரசபைகள்,பிரதேசசபைகளில் கடமையாற்றும் அனைத்து வகையான தற்காலிக ஊழியர்கள் என 483பேருக்கு நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்க்கு மாகாண பிரதம செயலாளர்,இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் த.ரொஸ்;மன்,இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் செயலாளர் தஜிவரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் சிலர் தமது அரசியல் இருப்பிற்காக இனங்களை பிரித்தாளும் நிலைமையை ஏற்படுத்துவதாகவும் அதற்குள் சிக்குண்டுசெல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டினை முன்னேற்ற முன்வரவேண்டும் எனவும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுனர் வேண்டுகோள் விடுத்தார்.