மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 54வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மண்முனை மேற்கு கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (01.05.2024) ஆரம்பமானது.
இன்று காலை 9
மணிக்கு ராஜா விளையாட்டு மைதானத்தில், ராஜா விளையாட்டுக் கழக தலைவர்
ச.பிரசாந் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியுள்ள இந்த கிரிக்கெட்
சுற்றுப்போட்டி நாளை(02) மற்றும் நாளை மறுதினமும் தொடர்ச்சியாக
நடைபெறவுள்ளது.
07 பேர் 05
ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான இந்த கிரிக்கெட் சுற்றுப்
போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 29 அணிகள் பலப்பரீட்சை
நடத்தவுள்ளது.
போட்டி
தொடரில் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை
சுவீகரிக்கும் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பண பரிசுகளும்
வழங்கப்படவுள்ளதுடன், சிறந்த துடுப்பாட்ட வீரன், சிறந்த
பந்துவீச்சாளருக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.