நாளைய தினம் வளிமண்டத்தில் ஏற்படகூடிய மாற்றம் -விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் நாளை (31) பல பிரதேசங்களில் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களுடன் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இவ்வாறு மனித உடலால் உணரக்கூடிய அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளது.