மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய உதவி பணிப்பாளர்,மாவட்ட உத்தியோகத்தர்களாக இரு பெண்கள்


மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய உதவி பணிப்பாளராக திருமதி நிசாந்தி அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரியாக திருமதி சதீஸ்வரி கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் அதிகாரியாகவும் பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டவர்களே இவ்வாறு உயர் நியமனங்களைப்பெற்றுள்ளனர்.