2021 மற்றும் 2022 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இரு தொகுதி ஆசிரிய பயிலுனர்களை ஒரே தடவையில் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு உள்ளீர்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரிகளுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு (22) திகதி வெள்ளிக்கிழமை மண்முனை மேற்கு குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரெத்தினம், விரிவுரையாளர்களான சி.லோகராஜா, ச.கிருபாகரன் ஆகியோர் கலந்து பாடநெறிதெரிவு மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பாக சிறப்பான தெளிவூட்டல்களை வழங்கியதோடு விண்ணப்பதாரிகளுக்கிருந்த சந்தேகங்களையும் போக்கியுள்ளனர்.




