இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி ஆரம்பம்.



தலைமைத்துவ தீர்மானம் எடுக்கும் திறன், மற்றும் கூட்டுப் பொறுப்பின் மூலம் பயனுள்ள பொது  சேவைக்கான  வெளிக்கள நடைமுறைப் பயிற்சி பட்டறை. 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களுக்கான  தலைமைத்துவம்  மற்றும் பல்வேறு திறன்களை விருத்தி செய்ய வெளிக்கள நடைமுறைப் பயிற்சி பட்டறை அண்மையில் குக்குலேகங்க லயா லெஷர் ஹோட்டலில்   நடைபெற்றது.    

பணியக ஊழியர்களின் அறிவு மற்றும் திறனை  மேன்படுத்த  பணியகத்தின் நிர்வாக மற்றும் மனிதவள முகாமைத்துத்துவ பிரினால்  ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இப்பயிற்சி நெறியானது அலுவலகப் பணிகளைத் தவிர பல நடைமுறைச் செயல்பாடுகளை உள்ளடக்கிய இத்திட்டம், தலைமைப் பயிற்சி, தலைமைத்துவ தீர்மானம் எடுக்கும் திறன் , மற்றும் கூட்டுப் பொறுப்பின் மூலம்  நிறுவனத்தையும் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வது போன்ற பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ள தேவையான புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளும்  வாய்ப்பை அலுவலக பணியாளர்களுக்கு  வழங்கும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு தரமான சேவையை வழங்க பணியகத்தின் நிர்வாக மற்றும் மனிதவள முகாமைத்துத்துவ பிரிவு ஆண்டுதோறும் இவ்வாறான பயிற்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது.

வெளிக்களப் பயிற்சி பட்டறை திட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் 80 உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன், எதிர்வரும் சில வாரங்களில் ஏனைய ஊழியர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.