பெண்களுக்கான அரசியல் பற்றிய வலுவூட்டல் செயலமர்வு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில்.....

 

வி.சுகிர்தகுமார் 

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் 18வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான அரசியல் பற்றிய வலுவூட்டல் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் (06) இடம்பெற்றது...
சேர்ஜ் போ.கொமண்ட் கிறவூண்ட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கிந்துஜா பிரதீபன் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வில் வளவாளர்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கான பயிற்றுவிப்பாளர் நளினீ ரெட்ணராஜா மற்றும் சட்டத்தரணி .சுதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.....
இச்செயலமர்வில் பெண்களின் தலைமைத்துவம் அரசியல் செயற்பாடுகள் சட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வளவாளர்களினால் வழங்கப்பட்டது.
செயலமர்வில் சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் உள்ளிட்டட சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள்; பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்...