மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டு ஆலயங்களை புனரமைக்கும் பணிகளை இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையுடன் அகிலன் பவுண்டேசன் இந்த புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளது.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் ஸ்ரீவேலாயுத சுவாமி ஆலயம் மகிழவட்டவானில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயம் என்பன இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையுடன் அகிலன் பவுண்டேசன் முழுமையாக புனரமைக்கப்பட்டுவருகின்றது.
குடந்த காலத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டிருந்த இந்த ஆலயங்களில் தற்காலிக நிலையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபகர் மு.கோபாலகிருஸ்ணனின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து இந்த ஆலயங்களை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று அப்பகுதிக்கு விஜயம் செய்த இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைவரும் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான மு.கோபாலகிருஸ்ணன் புனரமைக்கப்படும் ஆலயங்களின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
முன்னாள் அதிபர் கோபாலகிருஸ்ணன் உட்பட கிராம முக்கிஸ்தர்கள் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைவரும் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான மு.கோபாலகிருஸ்ணன்,அகிலண் பவுண்டேசனின் இலங்கைக்கான பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் ஆகியோரை வரவேற்றதை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன்போது ஆலயத்தின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டதுடன் 2024ஆம் ஆண்டு குறித்த ஆலயங்களின் கும்பாபிசேகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுத்தினர்.
இதன்போது வறிய நிலையில் குடும்பங்களுக்கும் அகிலன் பவுண்டேசன் ஊடாக உலர் உணவுப்பொருட்களும் வறிய நிலைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.