கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் ஞாயிற்றுக்கிழமை (20.11.2022) மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் எ. பிரியகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
புதிய நிர்வாக தெரிவின் போது சங்கத்தின் தலைவராக மீண்டும் எ. பிரியகாந்தன் தெரிவு செய்யப்பட்டதுடன். செயலாளராக D.G.B.நிரஞ்சன்,
உப தலைவராக வா.ச.ஜெகநாதன்,
உதவி செயலாளர் பி.பிரமிதன், பொருளாளர் க.சண்முகநாதன், நிர்வாக செயலாளர் திரு.இ.நாகலிங்கம், பிரச்சார செயலாளர் அ.ரமணன், உதவி பொருளாளர் ம.மகேந்திரராசா மேலும் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் தலைவர் தலைமையிலான உறுப்பினர்ககளால் கலந்துரையாடப்பட்டது.

