மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபைக்கு புதிய வண்ணக்குமார் உள்ளிட்ட நிருவாக உறுப்பினர்கள் நேற்று (14) திகதி ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசமகா சபையின் தீர்மானாத்திற்கமைய இந்நிருவாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது. புதிய வண்ணக்கர் தலைவராக கலிங்குலத்தினைச் சேர்ந்த இ.மேகராசா, செயலாளர் வண்ணக்கராக படையாட்சி குடியைச் சேர்ந்த சி.கங்காதரன், வண்ணக்கர் பொருளாளராக உலகிப்போடி குடியைச் சேர்ந்த ச.கோகுலகிருஸ்ணன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 29/08/2022
திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து குடித்திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 11/09/2022 திகதி ஞாயிற்றுக்கிழமை
தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து திரு வேட்டை திருவிழாவும் இடம்பெற்று, 12/09/2022 திகதி திங்கட்கிழமை பெருமானின் தீர்த்தோற்சவத்துடன் இவ்வாண்டிற்கான மகோற்சவம் இனிதே நிறைவடையவுள்ளது.