மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய பிரதிபொலிஸ்மா அதிபர் நியமனம்!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதிபொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சரத்குமார இன்று (15) திகதி காலை மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

பொலிஸாரின் விசேட அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து மதவழிபாடுகளிலும் ஈடுபட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சுபவேளையில் கையொப்பமிட்டு தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் களுத்துறையில் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அத்தியட்சகர் எம்.சுமதிபால, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி எட்டியாராச்சி உட்பட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரகளும் திருமதி சறத்குமார ஆகியோரும் குறித்த பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.