மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம் - கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு


கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை மஹோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று மாலை கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு நடைபெற்றது.

இன்று மாலை மட்டக்களப்பு நகரில் உள்ள கோட்டைமுனை வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து இன்று கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு நடைபெற்றது.

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று மட்டக்களப்பு நகர் ஊடாக கொடிச்சீலை ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.


ஆலய வண்ணக்கர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு இந்த கொடிச்சீலை ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

நாளை முற்பகல் 12.00மணிக்கு ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெறவுள்ளதுடன் கொடியேற்ற கிரியைகள் காலை 09மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆலயத்தின் மஹோற்சவத்தில் 27ஆம் திகதி புதன்கிழமை தேர் உற்சவமும் 28ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.