சுவிஸ் உதயம் அமைப்பினால் ஏழைகளுக்கு குடிநீர் திட்டம்


கிழக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான பணிகளை முன்னெடுத்துவரும் சுவிஸ் உதயம் அமைப்பினால் மிகவும் வறிய நிலையில் உள்ள மூன்று குடும்பங்களுக்கு குழாய் கிணறு நீர் திட்டங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது குடும்ப உறவினர்களின் நிதியுதவியுடன் குழாகிணறு நீர் விநியோக திட்டங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய பகுதியான திராய்மடு பகுதியில் குடிநீருக்கு மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்த மிகவும் வறிய குடும்பங்களுக்கு இந்த குழா கிணறு குடிநீர் விநியோக திட்டம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை கையளிக்கும் நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகத்தின் பிறந்த தினமான இன்று காலை நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவரும் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதனின் மேற்பார்வையில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் திருமதி றொமிலா செங்கமலனின் ஒருங்கிணைப்பில் இந்த குழாய் கிணறு குடிநீர் விநியோக திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் திருமதி றொமிலா செங்கமலன் ஒருங்கிணைப்பில்; நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவரும் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார். 

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தினால் தொடர்ச்சியாக பல்வேறு உதவித்திட்டங்கள் கிழக்கில் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.